Monday 20th of May 2024 01:44:16 PM GMT

LANGUAGE - TAMIL
.
வட்டுவாகல் பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல்!

வட்டுவாகல் பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல்!


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள வட்டுவாகல் பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பான விசேட கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த பெண்கள் பாதுகாப்பு இல்லத்தினை தொடர்ந்து நடாத்திச்செல்லல் மற்றும் இல்லம் மற்றும் அதன் உள்ளக பயனாளிகளின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் இல்லத்தின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், பெண்கள் சார்ந்து தொழிற்படும் ஏனைய திணைக்களங்களுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இக் கலந்துரையாடலில் இலங்கைக்கான பெண்கள் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், உதவி மாவட்டச் செயலாளர், சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர், வட்டுவாகல் பெண்கள் பாதுகாப்பு இல்லப் பொலிஸார், மாவட்டச் செயலக மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், JSAC மற்றும் UNFPA நிறுவன உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE